×

சண்டையை விலக்கிவிட்ட நண்பர்களை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது

பெரம்பூர்: வியாசர்பாடி கென்னடி நகரை சேர்ந்தவர்கள் தாமோதரன் (35), பிரபு (38). நண்பர்களான இருவரும் கடந்த 3 தினங்களுக்கு முன்பு, அதே பகுதியில் நடந்து சென்றபோது, சுமன் என்பவருக்கும், வேறு இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. இதை பார்த்த தாமோதரன், பிரபு ஆகியோர், சண்டையை தடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை தாமோதரன், பிரபு ஆகிய இருவரும் தங்கள் வீட்டின் அருகே நின்றிருந்தபோது, பைக்கில் வந்த 3 பேர், ‘‘சண்டை போட்ட எங்களை தடுப்பதற்கு நீங்கள் யார்,’’ எனக்கேட்டு தாமோதரனை அரிவாளால் பலமாக வெட்டினர்.

தடுத்த பிரபுவையும் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வியாசர்பாடி போலீசார், இதுதொடர்பாக கொடுங்கையூரை சேர்ந்த விவேக்ராஜ் (29), கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்த கார்த்திக் (32), கொடுங்கையூர் கண்ணதாசன் நகரை சேர்ந்த முரளிதரன் (27) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

The post சண்டையை விலக்கிவிட்ட நண்பர்களை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Perambur ,Damodaran ,Prabhu ,Vyasarpadi Kennedy ,
× RELATED பெரம்பூர் ரமணா நகர் பகுதியில் மெட்ரோ...